1.5 எழுத்து சொல் கற்பவை கற்றபின் Question 1. தேன் , நூல் , பை , மலர் , வா – இத் தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்துத் தொடர்மொழிகளாக்குக . Answer: தேன் – தேன் மருந்துப் பொருளாக பயன்படுகிறது . நூல் – நூல் பல கல் . பை – பை நிறைய பணம் இருந்தது . மலர் – மலர் பறித்து வந்தேன் . வா – விரைந்து வா . Question 2. வினை அடியை விகுதிகளுடன் இணைத்துத் தொழிற்பெயர்களை உருவாக்குக . காண் , சிரி , படி , தடு . எ . கா : காண் – காட்சி , காணுதல் , காணல் , காணாமை Answer: சிரி – சிரிப்பு , சிரித்தல் , சிரிக்காமை படி – படிப்பு , படித்தல் , படிக்காமை தடு – தடுப்பு , தடுத்தல் , தடுக்காமை Question 3. தனிமொழி , தொடர்மொழி ஆகியவற்றைக் கொண்டு உரையாடலைத் தொடர்க . அண்ணன் : எங்கே செல்கிறாய் ? ( தொடர்மொழி ) தம்பி :………………………….. (தனிமொழி ) அண்ணன் : ………………………….. வாங்குகிறாய் ? ( தொடர்மொழி ) தம்பி :………………………….. (தொடர்மொழி ) அண்ணன் : …………………………..(தனிமொழி ) தம்பி : ………………………….. (தொடர்மொழி ) அண்ணன் : ………………………….. தம்பி : …………………………..